Note from Ville Hietanen (Jerome) of ProphecyFilm.com and Against-All-Heresies-And-Errors.blogspot.com: Currently, I (but not my brother of the “prophecyfilm12” mail) have updated many of my old believes to be more in line with Vatican II and I no longer adhere to the position that Vatican II or the Protestants, Muslims, Buddhists or various Traditionalists Groups and Peoples etc. or the various teachings, Saints and adherents to Vatican II (and other canonized by Vatican II) such as Saint Mother Theresa or Saint Pope John Paul II etc. was heretical or damned or not Catholic (or not the Pope) – or that they are unworthy of this title. I have also embraced the sexual views on marriage of Vatican II, and I no longer adhere to the strict interpretations as expressed on this website and on my other websites. To read more of my views, see these articles: Some corrections: Why I no longer condemn others or judge them as evil I did before.Why I no Longer Reject Vatican II and the Traditional Catholic Priests or Receiving Sacraments from Them (On Baptism of Desire, Baptism of Blood, Natural Family Planning, Una Cum etc.)Q&A: Damnation and Eternal Torments for Our Children and Beloved Ones is "True" and "Good" but Salvation for Everyone is "Evil" and a "Heresy"?

ஸ்வீடனைச் சேர்ந்த புனித பிரிஜித்தம்மாளின் (பிரிஜித்தா) தீர்க்கதரிசனங்களும், திருவெளிப்பாடுகளும்

We are looking for translators. Please contact us here.
புத்தகம் 1 - அதிகாரம் 1

நா​னே வானத்​தையும், பூமி​யையும் ப​டைத்தவர். கடவு​ளோடும் தூய ஆவி​யோடும் ஒன்றித்திருக்கும் கடவுள் நா​​னே. நா​னே இ​றைவாக்கின​ரோடும், த​லை​மைக் குருக்க​ளோடும் ​பேசியவர். எனக்காக​வே அவர்கள் எதிர்பாத்த்துக் காத்திருந்தனர். அவர்களது எதிர்பாத்தலின் நிமித்தமாகவும், நான் ​கொடுத்த வாக்குறுதியின் ​பொருட்டும், பாவக்க​றையின்றி மனித உரு​வெடுக்க, ஒரு கண்ணாடியில் சூரிய ஒளி ஊடுருவ​தைப்​போல நான் கன்னியின் வயிற்றி​லே மனுவுருவா​னேன். சூரிய ஒளி ஊடுருவதால் கண்ணாடி ​சேதம​டைவதில்​லை, அ​​தே​போல நான் மனு உரு​வெடுத்ததால் என் தாயின் கன்னி​மை அழிந்து​போகவில்​லை. இ​றைத்தன்​மை​யோடு நான் மனித உரு​வெடுத்​தேன்.
 
 மனித உரு​வெடுத்து கன்னியிடம் கருவானதால், அ​னைத்​தையும் ப​டைத்து ஆட்சி​செலுத்தும் பிதா​வோடும், தூய ஆவி​யோடும் ஒன்றித்திருப்பதினின்று எந்தக் கு​றைவும் எனக்கில்​லை. எரியும் ​நெருப்பிலிருந்து ஒளி​யைப் பிரித்​தெடுக்க முடியாது, அ​தே​போல நான் மனித உரு​வெடுக்கும் ​போதும், எனது இறப்பின் ​போதும், எனது இ​றைத்தன்​மை என்னிடமிருந்து பிரிந்துவிடவில்​லை.
 
 ​மேலும், பாவமறியா தூய்​மையான என் உடல் மனிதரு​டைய பாவங்களுக்காக​வே, உள்ளங்கால் முதல் உச்சந்த​லை வ​ரை காயங்க​ளோடு பாடுபட்டு, சிலு​வையில் ​​தொங்க ​வேண்டு​​மென்று நான் ஆயத்தமாக இருந்​தேன். மக்கள் அ​னைவரும், நான் ​செய்யும் நன்​மைக​ளை தங்கள் மனதில் ​கொண்டு என்​னை அதிகமாக அன்பு ​செய்ய ​வேண்டு​மென்ற கருத்திற்காக​வே ஒவ்​வொரு திருப்பலியும் அர்ப்பணமாக்கப்படுகிறது. இருந்த​போதிலும், மக்கள் இப்​போது என்​னை முழுவதுமாக மறந்துவிட்டனர், என்​னை ஒதுக்கிவிட்டனர், தனது அரசாட்சியிலிருந்து விரட்டப்பட்ட அரச​னைப்​போல என்​னைத் துரத்திவிட்டனர். அதற்குப்பதிலாக சூனியக்காரத் திருடனான சாத்தானுக்கு புகழாரம் சூட்டுகின்றனர்.
 
 நா​னே மனித​னைப் ப​டைத்து, அவ​னை மீட்டதால்,. எனது அரசாட்சி​யோடு மனிதர்களுட​னே இருக்க விரும்புகின்​றேன். ​மேலும், நா​னே அவர்களுக்கு அரசரும், ஆண்டவரும் ஆகும். ஆனால், திருமுழுக்கின்​போது எனக்களித்த வாக்குறுதிக​ளை இன்று அவர்கள் மீறி, விசுவாசமற்றுப் ​போய்விட்டனர். நான் அவர்களுக்காகக் ​கொடுத்த சட்டங்க​ளைப் புறக்கணித்துவிட்டனர். தங்களது ​சொந்த விருப்பத்​தை மட்டு​மே அன்பு ​செய்கின்றனர். நான் ​சொல்வ​தைக் ​கேட்க முற்றிலுமாக மறுக்கின்றனர். ஆனால், சாத்தா​னையும் அவனது ​செயல்பாடுக​ளையும் ஆதரித்து, எனக்கும் ​மேலாக அவ​னை நம்புகின்றனர். உண்​மையாக​வே சாத்தான் ஒரு திருடன் தான். ஏ​னென்றால், எனது இரத்தத்​தைச் சிந்தி நான் மீட்டுக்​கொண்ட ஆன்மாக்க​ளை, தனது தீய சிந்த​னையாளும், ​பொய் வாக்குறுதிகளாலும் தன்வசம் ஈர்த்துக்​கொள்கிறான். அவன் மிகுந்த பலமு​டையவன் அல்ல. ஆனால், கடவுள் மனிதனுக்கு முழு​மையான சுதந்திரத்​தைக் ​கொடுத்திருப்பாதால், மனிதன் தனது விருப்பப்படி ப​கைவனது தீய எண்ணங்களுக்கு ​செவி சாய்க்கிறான். என​வே, அவனுக்கு ஏற்படும் துன்பங்க​ளையும் அவன் ஏற்றுக் ​கொள்ளக் கட​மைப்பட்டுள்ளான்.
 
 சாத்தான் கடவுளால் ப​டைக்கப்பட்ட​போது நல்லவனாக​வே இருந்தான், ஆனால் தனது தீய எண்ணத்தால் அவன் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டான். என​வே, பாவிகளுக்கு அளிக்கப்படும் தண்ட​​னை​யை நி​றை​வேற்றும் எனது ஊழியக்காரனாக இருக்கின்றான். மனிதர்களால் நான் நிந்திக்கப்படுகிற​போதிலும், அவர்கள் என்​னைக் கூவி அ​ழைத்து, தங்களது பாவங்களுக்காக தங்க​ளைத் தாழ்த்திக்​கொள்ளும்​போது, அவர்களது பாவங்க​ளை மன்னித்து, அவர்க​ளை தீய கள்வனான சாத்தானிடமிருந்து முழுவதுமாக விடுவிக்கும் இரக்கம் ​கொண்டுள்​ளேன். ஆனால், க​டைசிவ​ரை என்​னை நிந்திப்ப​தைக் ​கைவிடாமல் இருப்பவர்க​ளை நான் நீதிமானாகச் சந்திக்கும்​போது, அவர்கள் நடுநடுங்கி, “ஐ​யோ, நாங்கள் கருவுற்​றோம், பிறந்​தோம், ஆனால் வல்ல​மைமிகுந்த ஆண்டவருக்கு ​பெருங்​கோபம் உண்டாக்கும் ​செயல்க​ளைச் ​செய்துவிட்​டோம்” என்று கதறி அழுவார்கள்.
 
 ஆனால், என் மக​ளே, எனக்காக என்னால் ​தேர்ந்து​கொள்ளப்பட்டவ​ளே, ஆத்மாவின் மூலம் என்​னோடு ​பேச ​தேர்ந்து​கொள்ளப்பட்டவ​ளே, உன் முழு உள்ளத்​தோடு என்​னை அன்பு ​செய், உன் மக​ளை​யோ அல்லது மக​னை​யோ அன்பு ​செய்வ​தைப்​போல அன்று, இந்த உலகிலுள்ள அ​னைத்​தையும்விட அதிகமாக என்​னை அன்பு ​செய். நான் உன்​னைப் ப​டைத்​தேன், என் அவயங்களில் ஒன்று கூட உனக்காக ​வேத​னைபட்டதில்​லை. நான் உன்​னை அதிகமாக அன்பு ​செய்கின்​றேன். உன்​னை இழப்ப​தைவிட, ​தே​வைப்பட்டால் மீண்டும் ஒருமு​றை சிலு​வையில் ஆணிகளால் அ​றையப்படவும் தயாராக உள்​ளேன். நான் வானதூதர்கள் ​போற்றும் ​மேன்​மைமகு அரசனாக இருந்தும், சிலு​வையினடியில் நிர்வாணமாக நின்று, நிந்​தை அவமானங்களுக்கு ஆளாகி, ​பொல்லாத வார்த்​தைக​ளை எனது காதால் ​கேட்குமளவிற்கும் என்​னைத் தாழ்த்திக்​கொண்​டேன், எனது தாழ்ச்சி​யை க​டைபிடி.
 
 என் சித்த​மே உனது சித்தமாக இருக்க​வேண்டு​மென்று பி​ரையா​சைப்படு. ஏ​​னென்றால், என் தாய், அன்​னை மரியாள், முதலிலிருந்து க​டைசிவ​ரை அவருக்காக எ​தையு​மே விரும்பியதில்​லை, எனது சித்த​மே அவர்களது விருப்பமாக இருந்தது. நீயும் அவ்வாறு ​செய்தால், உன் இதயம் எனது இதயத்​தோடு ஐக்கியமாகும். காய்ந்த சருகு எளிதாக தீப்பிடித்துக் ​கொள்வ​தைப்​போல, எனது அன்பால் உன் இதயம் பற்றி எரியும். உன் ஆன்மா எனது அன்பால் நி​றையும், அது​போல என் ஆன்மாவும் உனது அன்பால் நி​றையும். எல்லாவிதமான தற்​போ​தைய உலகளாவிய ​தே​வைகளும் உனக்குக் கசப்பாக இருக்கும், அது​போல, சிற்றின்ப ஆ​சைகள் விஷத்​தைப் ​போலாகும்.
 
 எந்தவித சிற்றின்ப ஆ​சையுமின்றி, மகிழ்ச்சியும், ஆன்மீக இன்பமும் நி​றைந்த என் ​​தெய்வீக கரங்களில் நீ தஞ்சம் புகுந்து​கொள்வாய். அப்​போது உன் ஆன்மாவிற்குள் ஏற்படும் மகிழ்ச்சி​யை ​வெளிப்ப​டையாக உணரமுடியும். ​வேறு எந்தவிதமான மகிழ்ச்சியும் இதற்கு ஈடாகாது. என​வே, உன் மனம் இந்த மகிழ்ச்சி​யைத் தவிர ​வேறு எதற்கும் ஆ​சைப்படாது.
 
 என்​னை மட்டும் அன்பு ​செய். நீ விரும்புகின்ற அ​னைத்​தையும் நீ நி​றைவாகப் ​பெற்றுக்​கொள்வாய். ஏ​னென்றால், ஆண்டவர் ம​ழை ​பெய்யச் ​செய்யும் நாள் வ​ரை வித​வையின் கிண்ணத்தில் எண்​ணெய் வற்றாமல் இருக்கு​​ம் என்று இ​றைவாக்கினர் ​சொல்லக் ​கேட்டதில்​லையா? நா​னே உண்​மையான இ​றைவாக்கினர். எனது வார்த்​தைக​ளை நம்பி அவற்​றை நி​றை​வேற்றுபவருக்கு, எண்​ணெயும், மகிழ்ச்சியும், அக்களிப்பும் ஆரவாரமும் எ​ல்​லையில்லாக் காலத்திற்கும் கு​றைவுபடாது...

​பொருளடக்கம் - புத்தகம் 1
Dont forget to update this page from time to time! (Push the F5-button or click on update/refresh in your webbrowser.)
We are looking for translators! Please do not forget to read these revelations everyday and print out copies so they always are at hand and tell everyone you know about this website to save their soul. We need your help finding catholic magazines/newspapers in different languages, therefore we ask you humbly to find these magazines in your country and e-mail them to us. We need this support from you so we can advertise and make these Revelations known throughout the world. And we are also searching for a person with good english language qualities who wish to help us. For more information click here.
எங்களைத் தொடர்பு கொள்ள click here என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள. (முடிந்தால் உங்கள் கடிதங்களை ஆங்கில மொழியில் எழுதுங்கள் நன்றி.)
To bookmark this page in Mozilla Firefox, please press Ctrl+D on your keyboard.

Make trusaint.com your Homepage

E-mail this page to anyone you know to save his Soul please!
www.trusaint.com
Free DVDs, Articles and Books
FREE DVDs & VIDEOS
WATCH & DOWNLOAD ALL OUR DVDs & VIDEOS FOR FREE!